"லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1455

வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் லாபம் தரும் தொழிலாக வேளாண்மை உயர்த்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் வேளாண்துறை சார்பில் 3 நாட்களுக்கு நடைபெறும் 'வேளாண் சங்கமம்' கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண்துறையை வளர்க்க நிதி வளம் மட்டுமின்றி நீர்வளமும் வேண்டும் என்றார். திமுக அரசின் நடவடிக்கையால் வேளாண்துறை வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments